;
Athirady Tamil News

கிரிமியாவை குறிவைக்கும் உக்ரைன் – சுட்டு வீழ்த்தப்பட்ட சக்திவாய்ந்த டிரோன்கள் !!

0

ரஷ்யாவின் தெற்கு எல்லைப்பகுதியான பிரையான்ஸ்க் பகுதியில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை குறிவைத்து தாக்க வந்த 3 டிரோன்களை ரஷ்யா அழித்ததாகக் அறிவித்துள்ளது.

இதுகுறித்து பிரையான்ஸ்க் பிராந்தியத்தின் கவர்னர் அலெக்சாண்டர் போகோமாஸ் கூறியிருப்பதாவது,

நோவோசிப்கோவ் மாவட்டத்தில் உள்ள ‘ட்ருஷ்பா’ எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது உக்ரைன் நடத்திய தாக்குதலை ரஷ்ய வான்வெளி பாதுகாப்புப் படைகள் முறியடித்தன.

இந்த தாக்குதலில் 3 டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. என்று கூறியுள்ளார்.

ரஷ்ய- உக்ரைன் போரில் சமீப காலங்களாக டிரோன் மூலம் நடைபெறும் தாக்குதல்கள் அதிகரித்துவிட்டன. உக்ரைனின் கிவ் மற்றும் ரஷ்யாவின் மாஸ்கோ, இரண்டுமே வாரத்திற்கு பலமுறை, சில டிரோன்களை விரட்டுவதாகக் கூறுகின்றன.

போரில் ஈடுபடும் துருப்புகளுக்கு வழங்கப்பட வேண்டிய அவசியமான ஒன்று எண்ணெய். இதனால், ரஷ்ய மண்ணில் எண்ணெய் வசதிகள் உள்ள இடங்கள், உக்ரைனின் டிரோன் தாக்குதல்களின் முன்னுரிமை இலக்குகளாகத் தோன்றுகின்றன.

கிரிமியா தீபகற்பம், ரஷியாவுடன் இணைக்கப்பட்டு விட்டது. இதனை மீட்டெடுக்கப்போவதாக உக்ரைன் பலமுறை கூறியுள்ளது. இதனால், இந்த இடம் தொடர்ச்சியாக குறிவைக்கப்படுகிறது.

இந்த தீபகற்பத்தில் ரஷியப் படைகள், 9 டிரோன்களை வீழ்த்தியதாக, அந்த தீபகற்பத்திற்கு ரஷ்யாவால் நியமிக்கப்பட்ட கவர்னர், செர்ஜி அக்ஸியோனோவ் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.