;
Athirady Tamil News

குளியலறைக்குள் 6 அடி மலைப்பாம்பு!!

0

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தை சேர்ந்த கோல்ட் கோஸ்ட் என்பவர், தனது கழிவறையை உபயோகித்துக் கொண்டிருந்தார். அப்போது, குளியலறையின் ஷவர் ஃப்ரேமின் மேல் 6 சுமார் அடி நீளமுள்ள மலைப்பாம்பு படுத்திருந்தது. விஷத்தன்மையற்ற பாம்பு என்றாலும், பாம்பை பார்த்தவுடன் குளியலறையில் இருந்த அந்த நபர் பீதியடைந்தார். அங்கிருந்து ஓட்டம்பிடித்த அவர், சிறிது நேரத்தில் மீண்டும் குளியலறைக்குள் வந்து அந்தப் பாம்பை தனது செல்போனில் படம் பிடித்தார். பின்னர் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்து, அந்தப் பாம்பை பிடித்துச் செல்ல ஏற்பாடு செய்தார்.

இதுதொடர்பாக கோல்ட் கோஸ்ட் வெளியிட்ட பதிவில், ‘பாத்ரூமுக்குள் மலைப்பாம்பு ஒன்று என்னை பீதியாக்கியது. அதனை அப்புறப்படுத்திய ஆண்டனி ஜாக்சனுக்கு நன்றி. மழைக்காலம் என்பதால், மலைப்பாம்பு எப்படியோ எனது குளியலறைக்குள் புகுந்துவிட்டது’ என்று அதன் வீடியோவை சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.