பொதுத்துறை நிறுவனங்களில் 2 லட்சம் வேலைகள் நீக்கம்- ராகுல்காந்தி குற்றச்சாட்டு!!
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது:- ஒரு காலத்தில் பொதுத்துறை நிறுவனங்கள் இந்தியாவின் பெருமையாக இருந்தது. இளைஞர்கள் பொதுத்துறை நிறுவனங்களில் பணி புரிவதை தங்களது கனவாக கொண்டு இருந்தனர். ஆனால் இன்று பொதுத்துறை நிறுவனங்கள் தங்களது முக்கியத்துவத்தை இழந்து வருகின்றன.
பொதுத்துறை நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள் குறைந்துவிட்டன. கடந்த 2014-ம் அண்டு 16.9 லட்சமாக இருந்த பொதுத்துறை நிறுவனங்களில் பணி புரிபவர்கள் எண்ணிக்கை 2022-ம் ஆண்டில் 14.6 லட்சமாக குறைந்தள்ளது.