;
Athirady Tamil News

வீட்டுக்கு அருகில் குப்பை கொட்டுபவர்களுக்கு சூனியம் வைத்த நபரால் பரபரப்பு!! (PHOTOS)

0

தனது வீட்டுக்கு அருகில் குப்பை கொட்டுபவர்கள் விபத்தில் சிக்க கூடியவாறு தான் சூனியம் வைத்துள்ளதாக அறிவிப்பை தனது வீட்டின் முன்னால் காட்சி படுத்தி உள்ளார்.

யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடியை சேர்ந்த நபர் ஒருவரே அவ்வாறு காட்சிப்படுத்தி உள்ளார்.

குறித்த நபரின் வீட்டு வீதியோரமாக பலரும் குப்பைகளை வீசி சென்றுள்ளனர். அதனால் தினமும் பல அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வந்துள்ளார்.

அதனால் பொறுமை இழந்தவர் , ஒரு பொம்மை ஒன்றினையும் , யந்திர தகடு ஒன்றினையும் தனது வீட்டு வேலியில் கட்டி , ” சூனியம் வைக்கப்பட்டுள்ளது. வாகன விபத்து நிச்சயம் ஏற்படும். தயவு செய்து வீதிகளில் குப்பை போட வேண்டாம்” என பதாகை எழுதி காட்சிப்படுத்தி உள்ளார்.

அதன் பின்னர் அப்பகுதியில் எவரும் குப்பைகளை வீசி செல்வதில்லை என தெரிவிக்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.