;
Athirady Tamil News

ஆபத்தான முறையில் பயணம்: 7 குழந்தைகளுடன் மோட்டார் சைக்கிளில் சென்றவர் கைது!!

0

மும்பையைச் சேர்ந்த நபர் மோட்டார் சைக்கிளில் 7 குழந்தைகளை ஏற்றிச் செல்லும் வீடியோ டுவிட்டரில் வைரலானது. மோட்டார் சைக்கிள் முன்பக்கத்தில் 2 குழந்தைகளும், பின்பக்கத்தில் 3 குழந்தைகளும, மேலும் 2 குழந்தைகள் நின்று கொண்டு பயணிப்பதும் அந்த வீடியோவில் பதிவாகி இருந்தது. இது குறித்து அந்த டுவிட்டர் பயனாளர் “பொறுப்பற்ற பித்துப் பிடித்த நபர் 7 குழந்தைகளுடன் சவாரி செய்கிறார். 7 குழந்தைகளின் உயிரை பணயம் வைத்ததற்காக அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும்.

இந்த குழந்தைகளின் பெற்றோர் மீதும் வழக்குப் பதிவு செய்ய வேண்டும்” என்று பதிவிட்டிருந்தார். போக்குவரத்து காவல் துறையினர் குழந்தைகளை ஆபத்தான வகையில் அழைத்துச் சென்ற அந்த நபரை கைது செய்தனர். மேலும் அந்த நபர் மீது அளவுக்கு அதிகமாக குழந்தைகளை ஏற்றிச் சென்று உயிருக்கு ஆபத்தை விளைவித்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.