;
Athirady Tamil News

ரஷ்யாவில் கிளர்ச்சியை ஏற்படுத்திய வாக்னர் குழு தலைவர் எங்கே..! உறுதிப்படுத்திய பெலாரஸ் !!

0

வாக்னர் குழு தலைவர் எவ்ஜெனி பிரிகோஷின், ரஷ்யாவில் இருந்து வெளியேறி பெலாரஸ் நாட்டில் தஞ்சம் அடைந்துள்ளதாக அந்நாட்டு அரசு உறுதிப்படுத்தியது.

உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்ய ராணுவத்துக்கு ஆதரவாக அந்நாட்டின் தனியார் ராணுவ அமைப்பான வாக்னர் குழு போரிட்டது.

இதற்கிடையே தங்களது குழு மீது ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தியதாக வாக்னர் குழு தலைவர் எவ்ஜெனி பிரிகோஷின் குற்றசாட்டி ரஷ்யாவில் கிளர்ச்சியை நடத்தப் போவதாக அறிவித்தார்.

இதையடுத்து அக்குழுவின் 25 ஆயிரம் வீரர்கள் தலைநகர் மாஸ்கோவை நோக்கி படையெடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் பிரிகோஷின் மீது கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

அதன்பின் பெலாரஸ் நாட்டு அதிபர் லுகா ஷென்கோவின் சமரசத்தை ஏற்று கிளர்ச்சியை கைவிடுவதாக எவ்ஜெனி ரிகோஷின் அறிவித்தார்.

இந்தநிலையில், வாக்னர் குழு வீரர்கள் ரஷ்ய ராணுவத்தில் இணையலாம் அல்லது பெலாரஸ் நாட்டுக்கு செல்லலாம் அல்லது தங்களது குடும்பங்களுடன் செல்லலாம் என்று ரஷ்ய அதிபர் புடின் அறிவித்தார்.

ஆகையால் வாக்னர் குழு தலைவர் எவ்ஜெனி பிரிகோஷின், ரஷ்யாவில் இருந்து வெளியேறினார். ஆனால் அவர் எங்கு சென்றார் என்ற தகவல் வெளியாகாமல் இருந்தது.

அவர் சென்ற ஜெட் விமானம் பெலாரஸ் தலைநகர் மின்ஸ்க் அருகே நேற்று காலை தரையிறங்கியதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் எவ்ஜெனி பிரிகோஷின், பெலாரஸ் நாட்டில் தஞ்சம் அடைந்துள்ளதை அந்நாட்டு அரசு உறுதிப்படுத்தியது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.