;
Athirady Tamil News

அமைச்சருக்கு அதிகாரமளிக்கும் வர்த்தமானி வெளியானது !!

0

கலைக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்றங்களை மீண்டும் கூட்டுவதற்கு விடயத்துக்கு பொறுப்பான அமைச்சருக்கு அதிகாரமளிக்கும் வகையில் 3 திருத்தச் சட்டமூலங்கள் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளன.

1987 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க பிரதேச சபைச் சட்டம், மாநகர சபைகள் கட்டளைச் சட்டம் (அத்தியாயம் 252) மற்றும் நகர சபைகள் கட்டளைச் சட்டம் (அத்தியாயம் 255) ஆகியவற்றில் திருத்தம் செய்வதற்கு பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொடவின் தனிநபர் யோசனையாக இந்த 3 திருத்தச் சட்டமூலங்களும் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளன.

பிரதேச சபைகள் திருத்தச் சட்டம், நகர சபைகள் கட்டளை திருத்தச் சட்டம், மாநகர சபைகள் திருத்தச் சட்டம் ஆகிய சட்டங்களின் சரத்துகள் சில இந்த சட்டமூலத்தின் மூலம் திருத்தப்படவுள்ளன.

12 மாதங்கள் கடந்தாலும், அமைச்சரின் விருப்பத்தின் பேரில் முடிவெடுக்கப்பட்ட ஒரு காலத்துக்கு உள்ளூராட்சி மன்றத்தை மீண்டும் கூட்டுவதற்கு விடயதான அமைச்சருக்கு அதிகாரம் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, நீதிமன்றம், நியாயசபை அல்லது நிறுவனமொன்றை அவமதித்தல் தொடர்பான உத்தேச விதிமுறைகள் அடங்கிய புதிய சட்டமூலமொன்றும் நீதி அமைச்சரினால் வர்த்தமானியில் வௌியிடப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.