;
Athirady Tamil News

இன்று பெரியாழ்வார் திருநட்சத்திரம்!!

0

ஆழ்வார்களிலே பெரியாழ்வார் என்கிற பெயரோடு இருக்கின்ற சிறப்பு இவருக்கே உரியது. இவருடைய வளர்ப்பு மகள்தான் ஆண்டாள் நாச்சியார். கருடாழ்வாரின் அம்சமாக அவதரித்தவர். பெருமாளை பல்லாண்டு பாடியவர். கண்ணனை குழந்தையாக மாற்றி, கன்னித் தமிழில் பிள்ளைத் தமிழ் பாடிய பெருமகனார். இவர், ஸ்ரீவில்லிபுத்தூரிலே அவதரித்தவர்.

இவருடைய திருவரசு மதுரை அழகர் கோவில் மலையை ஒட்டி இருக்கிறது. இந்த தினத்தில், பல பெருமாள் கோவில்களிலும் பெரியாழ்வார் அவதாரத் திருநாளை, அவருடைய பாசுரங்கள் பாடிக் கொண்டாடுவார்கள். மதுரை அழகர் கோவிலில், திருமாலடியார் குழாம் சேர்ந்த பக்தர்கள் ஆயிரக்கணக்கில் கூடி, பெரியாழ்வார் ஜெயந்தியை மகாநாடு போல் நடத்துவார்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.