;
Athirady Tamil News

தேசிய கடன் மறுசீரமைப்புக்கு நிதி பற்றிய குழு அனுமதி !!

0

தேசிய கடன் மறுசீரமைப்பு முன்மொழிவுகளுக்கு அரசாங்க நிதி பற்றிய குழு அனுமதி அளித்துள்ளது.

இரண்டாவது நாளாக இன்று (30) பரிசீலிக்கப்பட்ட முன்மொழிவுகளுக்கு குழு அங்கீகாரம் வழங்கியதாக அதன் உறுப்பினரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் ரஞ்சித் பண்டார தெரிவித்துள்ளார்.

இன்று பிற்பகல் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் வைத்து பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தலைமையிலான குழுவினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அரசாங்க நிதி பற்றியக் குழு நேற்று (29) கூடி இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடியதுடன், கடன் மறுசீரமைப்பு தொடர்பான பூர்வாங்க முன்மொழிவு குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

இன்று, இது தொடர்பான அதிகாரப்பூர்வ முன்மொழிவு நிதிக்குழுவில் சமர்ப்பிக்கப்பட்டு அனுமதி அளிக்கப்படவிருந்தது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.