;
Athirady Tamil News

ஜூலை 5-ந்தேதி அதிமுக தலைமை நிலைய, மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம்!!

0

அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஜூலை 5-ந் தேதி தலைமை நிலைய செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் காலை 9 மணிக்கு நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் அனைத்து தலைமை கழகச் செயலாளர்களும், மாவட்ட கழகச் செயலாளர்களும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார். இக்கூட்டத்தில் தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து ஆலோசிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.