;
Athirady Tamil News

வடக்கு மாகாணத்தில் சில மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது – வைத்தியர் த. சத்தியமூர்த்தி!!

0

வடக்கு மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளிலும் சில மருந்து பொருட்களுக்கான தட்டுப்பாடு காணப்படுவதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தி தெரிவித்தார் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வடக்கில் உள்ள வைத்தியசாலைகளிலும் சில மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதன் காரணமாக நோயாளிகளுக்கு அசௌரியங்கள் இருக்கின்றது.

இருப்பினும் சுகாதார அமைச்சின் மருந்து பிரிவுக்கு பொறுப்பானவர்கள் தொடர்ச்சியாக மருந்துகளை அனுப்பி கொண்டிருக்கின்றார்கள் சில மருந்துகளுக்கு திடீரென தட்டுப்பாடு ஏற்படுகின்ற படியினால் பொதுமக்கள் அந்த மருந்தை மருந்தகங்களில் வாங்க வேண்டியநிலை காணப்படுகின்றதுஎன்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.