;
Athirady Tamil News

புலம்பெயர் தொழிலாளர்கள் மூலம் சுமார் $3 பில்லியன் டொலர் வரவு!!

0

இந்த வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் புலம்பெயர் தொழிலாளர்கள் மூலம் இலங்கைக்கு 2,823.3 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பணம் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த தகவலை தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார வெளியிட்டுள்ளார்.

ஜூன் மாதத்தில் உத்தியோகபூர்வ பரிவர்த்தனை மூலம் அனுப்பப்பட்ட தொழிலாளர்களின் பணம் 476 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.

இது 2022 ஜூன் மாதத்தில் 274.3 மில்லியன் டொலர்களாக இருந்தது.

இந்த ஆண்டு மே மாதம், இலங்கைக்கு 479.7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் புலம்பெயர் தொழிலாளர்கள் மூலம் அனுப்பப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் வெளிப்படுத்தினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.