;
Athirady Tamil News

இந்தோனேசியாவில் 5.6, பாகிஸ்தானில் 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!!

0

பாகிஸ்தானில் இன்று காலை 5 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக நிலஅதிர்வு தேசிய மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் 170 ஆழத்தில் ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளது. இதனால் சேதம் ஏற்பட்டதாக தகவல் ஏதும் கிடைக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளது. அதேவேளையில் இந்தோனேசியாவில் 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

ஜகர்த்தா நேரப்படி நள்ளிரவு 12.13 மணிக்கு (இந்திய நேரப்படி இன்று அதிகாலை 1.48) ஏற்பட்டுள்ளது. தனிம்பார் தீவு மாவட்டத்தின் வடமேற்கில் 207 கி.மீட்டர் தொலைவில் 131 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கும் ஏற்பட்டுள்ளது. இதனால் சுனாமி அலை உருவாவதற்கான வாய்ப்புகள் இல்ல எனவும் தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.