;
Athirady Tamil News

கைக்குழந்தையை மடியில் வைத்துக் கொண்டு மின்சார ரிக்ஷா ஓட்டும் பெண்!!

0

தாயை விட சிறந்த கோவில் இல்லை என்பார்கள். பெற்ற குழந்தைகளை வளர்ப்பதற்காக ஒரு தாய் எந்த அளவு கஷ்டப்படவும் தயங்க மாட்டார்கள் என்பதை உறுதிபடுத்தும் வகையில் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் இளம்பெண் ஒருவர் மின்சார ரிக்ஷா (இ ரிக்ஷா) ஓட்டுகிறார். அந்த பெண் தனது வாகனத்தில் வாடிக்கையாளர்களை ஏற்றுவதற்காக பேசுவது போன்று காட்சி உள்ளது. வீடியோவை கூர்ந்து பார்க்கும் போது அந்த பெண்ணின் மடியில் தனது கைக்குழந்தையை வைத்துள்ளார். சில நிமிடங்களுக்கு பிறகு அந்த பெண், வாடிக்கையாளர்களை ரிக்ஷாவில் ஏற்றிக்கொண்டு செல்கிறார்.

மேலும் மடியில் குழந்தையை கவனமாக வைத்துக்கொண்டு ஓட்டுவது போன்று காட்சி உள்ளது. இன்ஸ்டாகிராம் மற்றும் டுவிட்டரில் பகிரப்பட்ட இந்த வீடியோவை பார்த்த பயனர்கள் அந்த பெண்ணுக்கு மரியாதை செலுத்தும் வகையில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். பலர் அந்த பெண்ணின் இருப்பிடத்தை கேட்டனர். அவருக்கு பண உதவி செய்யலாம் என கூறியதோடு, அந்த பெண்ணின் தைரியத்தையும், மன உறுதியையும் பாராட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.