;
Athirady Tamil News

இலங்கையில் தந்தை மற்றும் மகனின் உயிரை பறித்த சம்பவம் ; துயரில் கதறும் உறவுகள்

0

கந்தானை பகுதியில் இருந்து ராகமை நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த தந்தை மற்றும் மகன், கந்தானை – பேரலந்த ரயில் கடவையில் ரயில் மோதியதில் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற மகன் பலத்த காயங்களுடன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளின் பின் இருக்கையில் பயணித்த தந்தை, மிக மோசமான நிலையில் ராகமை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.