;
Athirady Tamil News

சீனாவில் வெளுத்து வாங்கிய கனமழை; தண்ணீரில் தத்தளிக்கும் வீடுகள்..15 பேர் உயிரிழப்பு.. ரயில்வே பாலம் சேதம்..!!!

0

சீனாவில் வெளுத்து வாங்கிய கனமழையால் சாங்கிங் நகரில் ரயில் பாலம் சேதமடைந்தது. சீனாவில் கடந்த சில நாட்களாக கொட்டி தீர்க்கும் கனமழையால் சாங்கிங் நகரம் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. அங்கு இடைவிடாமல் பெய்யும் கனமழையால் சாலைகள் மூழ்கியதுடன் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. ஆறுகளில் அபாய அளவை தாண்டி வெள்ளம் பெருக்கெடுத்துள்ளதால் கரையோரங்களில் வசிக்கும் மக்கள் வீடுகளை காலி செய்து வருகின்றனர். பலாக் நகரில் பெருவெள்ளம் காரணமாக அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்தது.

இந்நிலையில் சாங்கிங் நகரில் ரயில்வே பாலம் சேதமடைந்துள்ளது. எனவே மழை ஓய்ந்து சீரமைப்பு பணிகள் நிறைவுபெறும் வரை அந்த வழித்தடத்தில் ரயில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சாங்கிங் நகரில் கனமழை பாதிப்பால் இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 17 கிராமங்களை சேர்ந்த மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.