;
Athirady Tamil News

மொரட்டுவையில் விபத்து; ஆபத்தான நிலையில் ஒருவர்!!

0

மொரட்டுவையில் இன்று காலை கப் வண்டி, பேருந்து ஒன்றுடன் மோதியதில் ஐந்து பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இன்று அதிகாலை எகொட உயன பிரதேசத்தில் பெலவத்தை நோக்கி பயணித்த டபுள் கெப் வண்டியொன்று, டயரை மாற்றுவதற்காக வீதியோரத்தில் நின்ற பஸ்ஸுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

காயமடைந்தவர்கள் கெப் வண்டியில் பயணித்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

காயமடைந்த ஐவரில் ஒருவர் ஆபத்தான நிலையில் இருந்ததால் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக பொலிஸார் கூறியதுடன், டபுள் கெப் வண்டியின் சாரதி உறங்கியதால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என நம்பப்படுகின்றது.

இதற்கமைய, விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை எகொட உயன பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.