;
Athirady Tamil News

திருமண வாழ்க்கை நடத்திய இளைஞன் கைது!!

0

காதலித்து திருமண வாழ்க்கை நடத்திய 29 வயதான இளைஞன், கட்டுகஸ்தோட்டை பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

14 வயதான சிறுமியுடன் காதல் கொண்டு, அந்த சிறுமியுடன் திருமண வாழ்க்கை நடத்தினார் என்றக் குற்றச்சாட்டின் கீழேயே அவ்விளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

அந்த திருமண வாழ்க்கைக்கு ஒத்துழைப்பு நல்கினார் என்றக் குற்றச்சாட்டின் கீழ் சிறுமியின் தாயாரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தில் உள்ள கலவன் பாடசாலையில் 10 ஆம் வகுப்பில் பயிலும் அச்சிறுமியுடன் மேற்படி இளைஞன் ஒருவருடமாக காதல் தொடர்பில் இருந்துள்ளார்.

இன்றைக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர், அச்சிறுமியை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்ற இளைஞன், சிறுமியுடன் திருமண வாழ்க்கை நடத்தியுள்ளார்.

இதுதொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய, ​இளைஞனும் சிறுமியும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில். இதற்கு சிறுமியின் தாயார் உடந்தையாக இருந்தமை தெரியவந்தது. அதன்பின்னர் தாயாரும் கைது செய்யப்பட்டார்.

இளைஞனையும் தாயாரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிறுமியை தங்களுடைய பொறுப்பின் கீழ், பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் பணியக அதிகாரிகள் கொண்டுவந்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.