;
Athirady Tamil News

அச்சுவேலியில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு வீச்சு ; பெண் படுகாயம்!! (PHOTOS)

0

யாழ்ப்பாணம் அச்சுவேலி பத்தமேனி பகுதியில் உள்ள வீடொன்றின் மீது இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை இரவு 09. 30 மணியளவில் பெற்றோல் குண்டு வீசி தாக்குதல் நடாத்தப்பட்டு , வீட்டில் இருந்த குடும்ப பெண் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தாக்குதலில் காயமடைந்த பெண் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு , மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

முகங்களை கறுப்பு துணியால் மூடி கட்டியவாறு , இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த 06 பேர் கொண்ட கும்பல் வீட்டினுள் அத்துமீறி நுழைத்து , ஜன்னல் கண்ணாடிகளை அடித்து நொறுக்கி , வீட்டினுள் சென்று , அங்கிருந்த பொருட்களையும் அடித்து நொறுக்கி பெற்றோல் குண்டு வீசியுள்ளனர்.

அதன் போது , வீட்டில் இருந்த, மூன்று பிள்ளைகளின் தாயான 42 வயதான பெண்ணொருவரையும் சரமாரியாக தாக்கி விட்டு , அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.

சத்தம் கேட்டு கூடிய அயலவர்கள் காயமடைந்த பெண்ணை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்ததுடன் அச்சுவேலி பொலிஸாருக்கும் அறிவித்தனர்.

அதனை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.