;
Athirady Tamil News

4 நாட்களுக்கு தொடர் விடுமுறை – அறிவிப்பை வெளியிட்ட குவைத் !!

0

குவைத் நாட்டில் 4 நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்லாமிய புத்தாண்டான மொஹரம் பண்டிகையை முன்னிட்டு அரச அலுவலகங்கள் மற்றும் பாடசாலைகளுக்கு ஜூலை 19 ,20, 21, 22 ஆகிய 4 நாட்கள் கூடுதலாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் இஸ்லாமிய மக்களால் மொஹரம் பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த மொஹரம் பண்டிகை இஸ்லாமிய புத்தாண்டாகவும் கருதப்படுகிறது.

ரமலான் பண்டிகை போலவே இந்த மொஹரம் பண்டிகை சந்திரன் தோன்றுவதை பொறுத்து தீர்மானிக்கப்படுகிறது.

இந்நாளில் இஸ்லாமிய மக்கள் புத்தாடைகள் அணிந்தும், ஏழை, எளிய மக்களுக்கு உணவு சமைத்து கொடுத்தும் பண்டிகையை சிறப்பிப்பர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.