;
Athirady Tamil News

வாலிபரை கத்தியால் குத்தி கொலை செய்த காதலியின் குடும்பத்தார்…. பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள்!!

0

டெல்லி ஜாஃப்ராபாத்தில் கடந்த திங்கட்கிழமை அன்று 25 வயதுடைய வாலிபரை கத்தியால் குத்தி கொலை செய்யும் பதைபதைக்கும் சி.சி.வி.டி. காட்சிகள் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக போலீசார் கூறுகையில், கொலை செய்யப்பட்ட சல்மான் கடந்த 2 ஆண்டுகளாக இளம்பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இவர்களின் காதலுக்கு இளம்பெண்ணின் குடும்பத்தார் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சம்பவத்தன்று சல்மான் அவரது நண்பர்களுடன் ஜாஃப்ராபாத் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த இளம்பெண்ணின் தந்தை மன்சூர், சகோதரர் மோஷின் மற்றும் மற்றொரு சகோதர் என 3 பேர் சேர்ந்து சல்மானை வழி மறித்து கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர். சம்பவ இடத்தில் இருந்து சல்மானின் நண்பர்கள் ஓடி விட்டனர் என்றனர். இச்சம்பவம் தொடர்பாக டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான 3 பேரை பிடிக்க தனிப்படை அமைத்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.