;
Athirady Tamil News

யாழ். பருத்தித்துறை துறைமுக கடற்பகுதியில் கரையொதுங்கிய ஆணின் சடலம் உறவினர்களால் அடையாளம்! (PHOTOS)

0

யாழ்ப்பாணம், வடமராட்சி – பருத்தித்துறை துறைமுக கடற்பகுதியில் இறங்கு தளத்தையொட்டியதாக கரையொதுங்கிய ஆண் ஒருவரின் சடலம் கடந்த திங்கட்கிழமை (17) அதிகாலை மீட்கப்பட்டது. அந்த சடலம் இன்று புதன்கிழமை (19) காலை உறவினர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளது.

அந்த தகவலின்படி, சடலமாக மீட்கப்பட்டவர், மாத்தறையை சேர்ந்த சுஜீவ அபயவர்தன விக்கிரமசிங்க (வயது 55) என்பவர் ஆவார்.

பருத்தித்துறை துறைமுக இறங்கு தளத்தையொட்டியதாக ஆண் ஒருவரின் சடலம் கடந்த திங்கட்கிழமை அதிகாலை வேளையில் கரையொதுங்கியிருந்தது.

இது தொடர்பில் தகவல் கிடைத்ததையடுத்து, பருத்தித்துறை பொலிஸார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

இந்நிலையில், பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதிபதி கிரிசாந் பொன்னுத்துரையும் குறித்த இடத்துக்கு சென்று சடலத்தை பார்வையிட்டு, மேலதிக சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க உத்தரவிட்டிருந்தார்.

அதனையடுத்து, சடலம் மீட்கப்பட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்தது.

இச்சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வந்த நிலையில், இன்று காலை உறவினர்கள் பிரேத அறைக்கு சென்று, குறித்த சடலத்தை அடையாளம் காட்டியுள்ளனர்.

குறித்த நபரின் மரணம் தொடர்பில் பருத்தித்துறை மரண விசாரணை அதிகாரி சதானந்தன் சிவராஜா மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.