;
Athirady Tamil News

ஹோட்டல் கட்ட இடமளியாதீர்!!

0

பொகவந்தலாவை பெருந்தோட்ட நிறுவன நிர்வாகத்தின் கீழுள்ள நோர்வூட் நிவ்வெளி தோட்டத்தொழிலாளர் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டு, காணித்தொடர்பிலான பிரச்சினைக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.

அந்தத் தோட்டத்தில் பணியாற்றிய தோட்டத்தொழிலாளர்களுக்கு, தோட்ட நிர்வாகத்தால், தொழிலாளர்களின் குடியிருப்புகளுக்கு அண்மையில், 5 ஏக்கர் காணி, வீடுகளைக் கட்டிக்கொள்வதற்காக வழங்கப்பட்டுள்ளது.

எனினும், வெளியில் இருந்து வந்த நபரொருவர், இந்த காணி தங்களுடைய நிறுவனத்துடையது என்றும், அதில் ஹோட்டல் கட்டுவதற்காக, சுத்திகரிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

எனினும், தங்களுடைய பெற்றோருக்கு வழங்கப்பட்ட காணியை, வெளிநபர்களுக்கோ, நிறுவனத்துக்கோ வழங்கமுடியாது என்று அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.