;
Athirady Tamil News

பாராளுமன்றத்தில் சோனியா காந்தியை சந்தித்து பிரதமர் மோடி நலம் விசாரித்தார்!!

0

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நேற்று முன்தினம் எதிர்க்கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

பின்னர் இருவரும் பெங்களூருவில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றனர். வழியில் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து சோனியா காந்தி சென்ற விமானம் அவசர அவசரமாக மத்திய பிரதேச மாநில தலைநகர் போபாலில் தரை இறக்கப்பட்டது. பின்னர் 2 பேரும் வேறு ஒரு விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றனர். இந்தநிலையில் விமானத்தில் எடுக்கப்பட்ட சோனியா காந்தியின் புகைப்படத்தை ராகுல் காந்தி இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தார்.

அந்த படத்தில் சோனியா காந்தி ஆக்சிஜன் முககவசம் அணிந்து காணப்படுகிறார். இப்படத்தின் கீழ் அம்மா, பதற்றத்திலும் கருணையின் உருவம் என்று ராகுல் குறிப்பிட்டு இருந்தார். இதனால் சோனியா காந்திக்கு என்ன என்ற பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையில் இன்று மழைக்கால கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்காக சோனியா காந்தி பாராளுமன்றத்துக்கு வந்தார். அவரை பிரதமர் மோடி சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது ஒருவருக்கொருவர் கைகூப்பி வணக்கம் தெரிவித்துக்கொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.