;
Athirady Tamil News

ஆந்திர வனப்பகுதியில் வெட்டிய மரத்திலிருந்து கொட்டிய தண்ணீர்!!

0

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் போடு ராஜு துரு கிராமம் அருகே வனப்பகுதி உள்ளது. இந்த வனப்பகுதியில் நேற்று பொதுமக்கள் விறகு சேகரிக்கச் சென்றனர். அப்போது அங்குள்ள ஒரு மரத்தை வெட்டினர். மரத்தை சிறிது அளவு வெட்டிய போது வெட்டுப்பட்ட இடத்திலிருந்து தண்ணீர் பீய்ச்சி அடித்தது .தொடர்ந்து தண்ணீர் நிற்காமல் அதிக அளவு வெளியேறியது.

பொதுமக்கள் அந்த தண்ணீரை பிடித்து குடித்தனர். தண்ணீர் மிகவும் சுவையாக இருப்பதாக தெரிவித்தனர். சிலர் குடங்கள் மற்றும் பாத்திரங்களில் தண்ணீரை பிடித்து சென்றனர் . அந்த மரத்திலிருந்து கொட்டிய தண்ணீர் சுத்தமாகவும் குடிப்பதற்கு சுவையாகவும் இருப்பதாக கூறினர். இதனை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரவ விட்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.