;
Athirady Tamil News

புவி வட்டப் பாதையில் இருந்து நிலவின் வட்டப் பாதைக்குள் நுழைந்தது சந்திரயான்- 3!!

0

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த ஜூலை 14ம் தேதி சந்திரயான் 3 விண்கலம் புறப்பட்டது. இந்நிலையில், புவி வட்டப் பாதையில் இருந்து நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் சந்திரயான் 3 விண்கலம் நுழைந்தது. புவியை சுற்றி வந்த விண்கலம், நிலவை சுற்றத் தொடங்கியது. சந்திரயான்- 3 இம்மாத இறுதிக்குள் நிலவில் தரையிறங்கும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.சந்திரயான்- 3 செயல்பாடுகள் குறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

மேலும், நாளை இரவு 11 மணிக்கு சுற்றுவட்டப்பதையை குறைப்பதற்கு இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இம்மாத இறுதியில் நிலவை சென்றடையும் என இஸ்ரோ ஏற்கனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.