;
Athirady Tamil News

விந்தியகிரி போர்க்கப்பல் ஜனாதிபதி திரவுபதி முர்மு 17-ந்தேதி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்!!

0

இந்திய கடற்படையில் ‘நீலகிரி’, ‘ஹிம்கிரி’, ‘உதய கிரி’, ‘துனகிரி, ‘தாரகிரி’ என்று பெயரிடப்பட்ட 5 போர்க்கப்பல்கள் உள்ளன. 6-வதாக விந்தியகிரி என்ற பெயரிலான போர்க்கப்பல் கொல்கத்தாவின் ஹூக்ளி ஆற்றின் கரையில் உள்ள கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் அண்ட் என்ஜினீயர்ஸ் கப்பல் கட்டும் நிலையத்தில் உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த போர்க்கப்பலை ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகிற 17-ந்தேதி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

மேலும் புராஜெக்ட் 17ஏ திட்டத்தின் கீழ், மும்பையை தளமாகக் கொண்ட எம்.டி.எல். நிறுவனத்தில் 4 கப்பல்களும், கொல்கத்தா ஜி.ஆர்.எஸ்.இ. நிறுவனத்தில் 3 கப்பல்களும் கட்டுமானத்தில் உள்ளன. முதல் ஐந்து கப்பல்கள் 2019-2022-ம் ஆண்டுகளில் தொடங்கப்பட்டன. இந்த போர்க்கப்பல்களில் அதிநவீன ஆயுதங்கள் மற்றும் சென்சார்கள் மற்றும் பிளாட்பார்ம் மேனேஜ்மென்ட் சிஸ்டம்கள் உள்ளன என்று கடற்படை அதிகாரிகள் தெரிவித்தனர். “விந்தியகிரி போர்க்கப்பல் , உள்நாட்டுப் பாதுகாப்புத் திறன்களின் எதிர்காலத்தை வலுப்படுத்தும். அதே வேளையில், அதன் வளமான கடற்படை பாரம்பரியத்துக்கான இந்தியாவின் உறுதிப்பாட்டின் அடையாளமாக உள்ளது” என்று கடற்படை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.