;
Athirady Tamil News

மத்திய பிரதேசத்தில் தேர்தல் முடிவுக்கு பின்னர்தான் முதலமைச்சர் தேர்வு: அமித் ஷா!!

0

மத்திய பிரதேச மாநிலத்தில் வருகிற நவம்பர் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது. இன்னும் நாட்கள் இருக்கும் நிலையில், பா.ஜனதா தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டுள்ளது. மத்திய பிரதேசத்தில் சிவராஜ் சவுகான் தலைமையிலான மாநில ஆட்சி நடைபெற்று வருகிறது.

இதனால் மீண்டும் சிவராஜ் சவுகான் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, தேர்தல் பா.ஜனதா எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கப்பட்டது. இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம், சிவராஜ் சிங் சவுகான் முதலமைச்சராக தொடருவாரா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு தேர்தல் முடிவுக்கு பின்னர்தான், முதலமைச்சர் தேர்வு செய்யப்படுவார் என அமித்ஷா பதில் அளித்துள்ளார். மேலும், ”சிவராஜ் சவுகான் முதலமைச்சராக இருக்கிறார். இது எங்கள் கட்சியின் வேலை. நாங்கள் முடிவு செய்வோம். அவர் முதலமைச்சர்.

நாங்கள் தேர்தலில் இருக்கிறோம். பிரதமர் மோடி மற்றும் சவுகான் தலைமையிலான ஆட்சியில் நாம் செய்த பணிகளை மக்களிடம் கொண்டு செல்லவேண்டும். ஆகவே, வளர்ச்சி தேர்தல் நிகழ்ச்சி நிரலாக அமைக்க வேண்டும் என்பதே எனது வேண்டுகோள். பிரதமர் மோடி, பிரசாரத்தின்போது முன்னிலைப் படுத்தப்படுவார்” என்றார். பா.ஜனதா எப்போதுமே, தேர்தலுக்கு முன்னதாக முதல்வர் வேட்பாளரை அறிவிப்பதில்லை. மீண்டும் ஆட்சியை பிடித்தால், ஏற்கனவே முதல்வராக இருக்கும் நபருக்கு முன்னுரிமை வழங்கப்படும். இருந்தாலும், பா.ஜனதாவின் பாராளுமன்ற குழுதான் இறுதி முடிவு எடுக்கும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.