;
Athirady Tamil News

பிரேசிலில் பேருந்து விபத்து – கால்பந்து ரசிகர்கள் 7 பேர் பலி!!

0

பிரேசில் ஹரிசோன்டே பகுதியில் கால்பந்து போட்டிக்காக சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் 7பேர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த கால்பந்து போட்டி முடிந்ததும் பேருந்தில் 40 ரசிகர்கள் வீடு திரும்பினார்கள்.

பேருந்து மலைப்பகுதியில் சென்று கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்து ஓடி வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கி 7 ரசிகர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 27 பேர் படுகாயம் அடைந்தனர்.

இது பற்றி அறிந்ததும் மீட்பு படையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.