;
Athirady Tamil News

ஜி 20 உச்சி மாநாடு – டெல்லியில் 3 நாட்கள் பொது விடுமுறை அறிவிப்பு!!

0

தலைநகர் டெல்லியில் செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் ஜி 20 உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு 3 நாட்கள் பொது விடுமுறை அறிவிக்கும்படி டெல்லி தலைமை செயலாளரிடம் டெல்லி போலீசார் வேண்டுகோளாக கேட்டு கொண்டனர். இதேபோல், கட்டுப்பாட்டு மண்டலங்களுக்கு உட்பட்ட வர்த்தக மற்றும் தொழில் நிறுவனங்களை மூடும்படி உத்தரவிட வேண்டும் என்றும் கேட்டிருந்தது.

இந்நிலையில், போலீசாரின் கோரிக்கையை ஏற்று ஜி 20 உச்சி மாநாட்டை முன்னிட்டு செப்டம்பர் 8-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை 3 நாட்கள் டெல்லியில் பொது விடுமுறை என அறிவிக்க முதல் மந்திரி கெஜ்ரிவால் ஒப்புதல் அளித்துள்ளார். இந்த நாட்களில் அனைத்துப் பள்ளிகள் மற்றும் மாநகராட்சி அலுவலகங்கள் உள்பட அரசு அலுவலகங்கள் மூடப்பட்டு இருக்கும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.