;
Athirady Tamil News

பெண்ணின் தொலைந்த செல்போனை கண்டுபிடிக்க ஏரியில் குதித்த வாலிபர்!!

0

தொலைந்து போன செல்போனை கண்டுபிடிப்பதற்காக வாலிபர் ஒருவர் ஏரியில் குதித்து அதனை மீட்ட வீடியோ பேஸ்புக்கில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் அமெரிக்காவின் நியூ ஹாம்ப்ஷயரில் உள்ள சுனாபி நகரில் நடைபெற்றுள்ளது. அப்பகுதியை சேர்ந்த ஒரு பெண் ஏரியையொட்டி நடந்து சென்ற போது எதிர்பாராதவிதமாக அவரது செல்போன் ஏரிக்குள் விழுந்துள்ளது.

இதனால் அந்த பெண் அதிர்ச்சி அடைந்து கதறி உள்ளார். இதைப்பார்த்த சைமன் என்ற வாலிபர் உடனடியாக ஏரிக்குள் ‘டைவ்’ அடித்து குதித்து நீந்தி சென்று தனது முதல் முயற்சியிலேயே அந்த செல்போனை மீட்டு கொண்டு வந்து உரியவரிடம் ஒப்படைத்தார். இதை அங்கிருந்தவர்கள் பார்த்து சைமனை பாராட்டிய காட்சிகள் வீடியோவில் இடம்பெற்றுள்ளது. இந்த வீடியோ 5 ஆயிரத்துக்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளதோடு, நெட்டிசன்களின் பாராட்டுகளையும் பெற்று வருகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.