;
Athirady Tamil News

போட்டோ பிரேமுக்கு பின்னால் மறைந்திருந்த மலைப்பாம்பு!!

0

பாம்புகளை கண்டால் படையும் நடுங்கும் என்பார்கள். அதுவும் பாம்பு வீடுகளுக்குள் புகுந்துவிட்டால் அதை அகற்றும் வரை வீட்டில் இருப்பவர்களுக்கு தூக்கம் இருக்காது. இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் ஒரு வீட்டுக்குள் போட்டோ பிரேமுக்கு பின்னால் ராட்சத மலைப்பாம்பு இருந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அங்குள்ள ஒரு வீட்டின் அறையில் பெரிய போட்டோ பிரேமை தொங்கவிட்டிருந்தனர்.

அதன் பின்னால் மலைப்பாம்பு மறைந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர், பாம்பு பிடிக்கும் ‘சன்ஷைன் கோஸ்ட் ஸ்னேக் கேட்சர்ஸ்’ குழுவினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் அங்கு விரைந்து சென்று லாவகமாக அந்த பாம்பை பிடித்து செல்கின்றனர். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலான நிலையில், அதைப்பார்த்த பயனர்கள் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.