;
Athirady Tamil News

தாகத்தில் வாடிய நாய்க்கு தெரு குழாயை திறந்து உதவிய பெண்!!

0

கோடை முடிந்த பிறகும் கொளுத்தும் வெயிலால் மனிதர்கள் மட்டும் அல்ல, விலங்குகளும் தாகம் அடைகின்றன.
இந்நிலையில் தாகத்தால் தவித்த தெருநாய்க்கு குழாயில் தண்ணீர் குடிக்க உதவும் பெண் ஒருவரின் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. கியூ இந்தியா பக்கத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோவில் நாய் தாகத்தை தணிக்க முடியாமல் மூடிய தெரு குழாயை ஏக்கத்துடன் பார்க்கிறது.

இதைப்பார்த்த அந்த பெண் பரிதாபப்பட்டு தெரு குழாயை திறந்து விடுகிறார். உடனே நாய் குழாயில் இருந்து தண்ணீர் குடித்து தனது தாகத்தை தீர்த்து கொள்கிறது. இந்த வீடியோ வலைதளங்களில் வைரலாகி 16 ஆயிரத்திற்கும் அதிகமான விருப்பங்களை பெற்றது. அந்த பெண்ணின் கருணை செயலை பாராட்டி நெட்டிசன்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.