;
Athirady Tamil News

இரு பேருந்துகள் விபத்து; 14 பேர் படுகாயம் !!

0

தனோவிட்ட பிரதேசத்தில் இன்று (26) இரவு இரண்டு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நிறுத்தப்பட்டிருந்த பேருந்துடன் மற்றுமொரு பேருந்து மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் சுமார் 14 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் நால்வர் தீவிர சிகிச்சைப்பிரிவில் உள்ளதாகவும், சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.