;
Athirady Tamil News

பா.ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால்… எச்சரித்த மம்தா பானர்ஜி !!

0

மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அணி பேரணியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:- பா.ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் எதேச்சதிகார ஆட்சியை இந்தியா எதிர்கொள்ள நேரிடுவது உறுதி. பா.ஜனதா டிசம்பர் அல்லது ஜனவரிலேயே தேர்தலை நடத்தும் வாய்ப்பு உள்ளது. காவி கட்சி ஏற்கனவே சமூகங்களுக்கு இடையேயான பகைமையின் நாடாக மாற்றிவிட்டது. அவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், வெறுப்பு நாடாக மாற்றிவிடுவார்கள். அடுத்த வருடம் மக்களவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், தேர்தல் பிரசாரத்திற்காக அனைத்து ஹெலிகாப்டர்களையும் முன்பதிவு செய்துவிட்டனர். ஆகவே, மற்ற கட்சிகள் பிரசாரத்திற்காக அவற்றை பயன்படுத்த முடியாது.

இவ்வாறு தெரிவித்தார். மேலும், கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட பட்டாசு விபத்தில் 9 பேர் பலியானார்கள். இதுகுறித்து கேட்ட கேள்விக்கு, “சிலர் சட்டவிரோத செயல்களை ஊக்குவிக்கின்றனர். சில போலீஸ் அதிகாரிகள் அதற்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர். பெரும்பாலான போலீசார் தங்களை பணியை அர்ப்பணிப்புடன் செய்து வருகின்றனர். ஆனால் சிலர் மற்றவர்களுக்கு உதவி செய்து வருகிறார்கள். மாநிலத்தில் ஊழல் தடுப்புப் பிரிவு உள்ளது என்பதை அவர்கள் நினைவில் கொள்ள வேண்டும்” என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.