;
Athirady Tamil News

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பிஎஸ்எல்வி-சி57 ராக்கெட் மூலம் விண்ணில் பாய்கிறது ஆதித்யா எல்-1: இஸ்ரோ!!

0

நிலவின் தென் துருவ பகுதியை ஆய்வு செயவதற்காக சந்திரயான் 3 வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது. நிலவில், விக்ரம் லேண்டரில் இருந்து வெளியே வந்த பிரக்யான் ரோவர் அதன் ஆராய்ச்சி பணிகளை தொடங்கி உள்ளது. சந்திரயான் 3 வெற்றியை தொடர்ந்து, செப்டம்பர் முதல் வாரத்தில் ஆதித்யா விண்கலத்தை விண்ணில் செலுத்த இருப்பதாக இஸ்ரோ அறிவித்திருந்தது. அதன்படி, வரும் செப்டம்பர் 2-ந்தேதி காலை 11.50 மணிக்கு ஆதித்யா எல்-1 விண்கலம் விண்ணில் பாய்கிறது.

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பிஎஸ்எல்வி-சி57 ராக்கெட் மூலம் செலுத்தப்படவுள்ளதாக இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சூரியன் தொடர்பான ஆராய்ச்சிக்காக ஆதித்யா எல் 1 விண்கலம் பிஎஸ்எல்வி-சி57 ராக்கெட் மூலமாக விண்ணில் செலுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.