;
Athirady Tamil News

இது இப்போது அவசியமற்றது !!

0

கூட்டு எதிரணி ஒன்று தோன்றும் பட்சத்தில் எதிர்கட்சித் தலைவர் சஜித் தான் பொதுவான எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தி தெரிவிப்பதும், தேசிய மக்கள் சக்தி அநுர குமாரவை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிப்பது போன்ற தேர்தல் தொடர்பான விடயங்கள் இப்போதைக்கு அவசியமற்ற விடயங்களென பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

ஜனநாயகத்திற்காக நிற்போம் என்ற தொனிப்பொருளுடன் எமது பொது எதிரணியை உருவாக்குவதற்கான முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது. எனவே ஜனநாயகத்தை நிலைநாட்ட அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டுமென நாங்கள் நம்புகின்றோம். தேர்தல் பிற்போடப்படுமாயின் அதைப்பற்றிப் பேசுவதில் அர்த்தமில்லை. எனவே இப்போது ஜனாதிபதி வேட்பாளரைப் பற்றிப் பேசுவது பொருத்தமற்றது என அவர் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.