;
Athirady Tamil News

யாழ் வீதியில் பயணித்துக் கொண்டிருந்த பட்டா ரக வானம் ஒன்று திடீரென தீ!! (PHOTOS)

0

யாழ்ப்பாணத்தில் வீதியில் பயணித்துக் கொண்டிருந்த பட்டா ரக வானம் ஒன்று திடீரென தீப்பிடித்து முற்றாக எரிந்துள்ளது.

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பிரதான வீதியின் வல்லை சந்திப்பகுதியில், இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை மதியம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பருத்தித்துறை பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்று கொண்டிருந்த பொருட்கள் ஏற்றும் பட்டா வாகனமே இவ்வாறு எரிந்து நாசமாகியுள்ளது. தீ விபத்துக்கு மின் ஒழுக்கு காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை அச்சுவேலி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.