;
Athirady Tamil News

ஒய்வுபெற்ற அரச நிர்வாக சேவை உத்தியோகத்தர்களை மீள நியமிப்பதை நிறுத்தவும்!!

0

இலங்கையில் பல நிர்வாக சேவை உத்தியோகத்தர்கள் இருந்தும் மற்றும் துறைசார் இளைஞர்கள் இருந்தும் தொடர்ச்சியாக வடக்கு, கிழக்கு உட்பட்ட பல மாகாணங்களிலும், அரச ஆணைக்குழுக்களிலும் ஒய்வுபெற்ற அரச உத்தியோகத்தர்களை மீள இணைத்துக்கொள்வது அரசியல் ரீதியாக செயற்பாடாகவே காணப்படுகின்றது.

இளம்தலைமுறையினருக்கும் துறைசார் நிபுனர்களாகவுள்ள இளையவர்களை இணைத்துக்கொள்ள வேண்டும் எனவும், ஒய்வுபெற்ற அரச நிர்வாக சேவை உத்தியோகத்தர்களை மீளவும் அரச சேவையில் இணைப்பதை கண்டிப்பதாகவும் இதற்காக வீதியில் இறங்க தயாராகவுள்ளதாகவும் மக்கள் போராட்ட இயக்கம் தெருவித்துள்ளது.

அரச சேவையினை வினைத்திறனாகவும் விளைதிறனாகவும் மேற்கொள்ள புதியவர்கள் இளையவர்கள் இணைத்துக்கொள்ளப்பட வேண்டும் எனவும் உடனடியாக ஒய்வு பெற்ற அரசநிர்வாக உத்தியோகத்தர்களது கடமை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் எனவும் தெருவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.