;
Athirady Tamil News

மாணவிகளின் தலையை மொட்டையடித்த ஆசிரியர் பணியிடைநீக்கம் !!

0

ஹிஜாப் சரியாக அணியவில்லை என்று மாணவிகளின் தலையை ஆசிரியரொருவர் மொட்டை அடித்த சம்பவம் இந்தோனேசியாவில் இடம்பெற்றுள்ளது.

இந்தோனேசியாவின் லமொங்கனின் கிழக்கு ஜாவா நகரில் உள்ள பாடசாலை ஒன்றிலேயே இந்த சம்பவம் நடந்துள்ளது.

ஹிஜாப் சரியாக அணியவில்லை என்று பாடசாலையிலுள்ள 14 இஸ்லாமிய மாணவிகளின் தலையின் ஒரு பகுதி ஆசிரியர் ஒருவர் மொட்டை அடித்துள்ளார்.

அந்த ஆசிரியர் யாரென்று அடையாளம் காணப்படாத நிலையில், அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதுடன், நடந்த சம்பவத்திற்கு குறித்த பாடசாலையின் தலைமை ஆசிரியர் ஹர்டோ மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளார்.

அதுமாத்திரமல்லாமல், பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு உளவியல் ரீதியிலான ஆலோசனைகளை வழங்குவதாகவும் பாடசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் குறித்த ஆசிரியரை நிரந்தரமாக பணியில் இருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கை அனைவர் மத்தியிலும் பலமாக எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.