;
Athirady Tamil News

யாழில். 4 மாத குழந்தையின் கழுத்தில் கத்தி வைத்து கொள்ளை!!

0

அத்துமீறி வீட்டினுள் நுழைந்து, நான்கு மாத குழந்தையின் கழுத்தில் கத்தி வைத்து கொள்ளையடித்த கொள்ளை கும்பல் வீட்டு உரிமையாளரின் மோட்டார் சைக்கிளையும் கொள்ளையடித்து , அதில் தப்பி சென்றுள்ளது.

யாழ்ப்பாணம் , மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சண்டிலிப்பாய் , மாசியாப்பிட்டி பகுதியில் உள்ள வலி.தென் மேற்கு பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரின் வீட்டினுள் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை அத்துமீறி நுழைந்த நால்வர் கொண்ட முகமூடி கொள்ளை கும்பலே இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது.

வீட்டினுள் நுழைந்தவர்கள் 4 மாத குழந்தையை தூக்கி அதன் கழுத்து கத்தியை வைத்து , வீட்டில் இருந்தவர்களை மிரட்டி , 11 பவுண் தங்க நகைகள் , பெறுமதியான 3 கையடக்க தொலைபேசிகள் , 2 இலட்ச ரூபாய் பணம் மற்றும் வங்கி புத்தகம் என்பவற்றை கொள்ளையடித்துள்ளனர்.

கொள்ளை கும்பல் தப்பி செல்லும் போது , “பொலிஸாருக்கு அறிவித்தால் , பின் விளைவுகளை சந்திக்க நேரிடும்” என வீட்டாரை மிரட்டி விட்டு , வீட்டில் நின்ற மோட்டார் சைக்கிளையும் கொள்ளையடித்து , தப்பி சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து , பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துளள்னர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.