;
Athirady Tamil News

சீனாவில் சாவோலோ சூறாவளி – 460 விமானங்கள் இரத்து !!

0

சீனாவின் ஹொங்கொங்கின் குவாங்டாங் மாகாணத்தில் ஹுய்டாங் கவுன்டி பகுதியில் இருந்து தைஷன் நகரை நோக்கி சாவோலோ சூறாவளி இன்று (02) காலை கடந்து செல்லும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

இந்த சூறாவளியானது, தொடர்ந்து மத்திய குவாங்டாங் அருகே மேற்கு நோக்கி நகர்ந்து செல்ல கூடும் என சீன தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால் மணிக்கு 200 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசும் சூழலும் காணப்படுகிறது.

இதனால், முன்னெச்சரிக்கையாக 8 இலட்சம் பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதன் காரணமாக நேற்று (01) மதியம் முதல் இன்று காலை 10 மணி வரை 460 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.