;
Athirady Tamil News

ஊடக சுதந்திரமே ஜனநாயகத்தின் உயிர்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!

0

சென்னை மலையாளி சங்கம் இணைந்து நடத்தும் மீடியா மீட் 2023 நிகழ்ச்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர் கூறியதாவது:- நாம் ஒரே மொழி குடும்பத்தை சேர்ந்தவர்கள், திராவிட குடும்பத்தை சேர்ந்தவர்கள். சமத்துவத்துக்கு எதிராக உள்ளவர்களுக்கு திராவிடம் என்ற சொல் எரிச்சலாக இருக்கிறது. ஊடகத்தினர் சுதந்திரமாக செயல்பட்டால்தான், நாட்டின் ஜனநாயகம் உயிர்ப்புடன் இருக்கும். தற்போது, பத்திரிகை துறையில் பெண்கள் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர்.

சமூக நீதிக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம். இந்தியாவை பாதுகாக்க, அண்ணா திராவிட நாடு கோரிக்கையை கைவிட்டனர். இன்று, இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு ஆபத்து வந்துள்ளது. இந்தியாவை காப்பாற்ற ஊடகங்களும், சிறப்பான பங்களிப்பை வழங்க வேண்டும். அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக பிரதமர் மோடி செயல்படுகிறார். இதை மக்கள் உணர வேண்டும். ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் விடியலை ஏற்படுத்திட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.