;
Athirady Tamil News

யாழில். வாள் வெட்டு ; 09 மாதங்களின் பின் கைதான சந்தேகநபர்!!

0

யாழ்ப்பாணத்தில் வாள் வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் 09 மாதங்களுக்கு பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் மயிலங்காடு பகுதியில் , கொடுக்கல் வாங்கல் பிரச்சனை காரணமாக இளைஞன் ஒருவர் மீது கடந்த ஜனவரி மாதம் வாள் வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில் , சந்தேகநபர் தலைமறைவாகி இருந்தார். இந்நிலையில் நேற்றைய தினம் புதன்கிழமை குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரை சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.