;
Athirady Tamil News

யாழ் வடமராட்சி வல்லிபுரம் ஆழ்வார் கோயில் வருடாந்த மகோற்சவம் ஆரம்பமானது.!! (PHOTOS)

0

வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் வடமராட்சி வல்லிபுரம் ஆழ்வார் கோயில் வருடாந்த மகோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து காலை 8. 45 மணியளவில் கொடியேற்றம் இடம்பெற்றது.

தொடர்ந்து 16 நாட்கள் இடம் பெறவுள்ள உற்சவத்தில் எதிர்வரும் 22 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வெண்ணைத் திருவிழாவும், 23ஆம் திகதி சனிக்கிழமை துகில் திருவிழாவும், 24ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பாம்பு திருவிழாவும், 25ஆம் திகதி திங்கட்கிழமை கம்சன் போர் திருவிழாவும் , 26 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வேட்டைத் திருவிழாவும், 27ஆம் திகதி புதன்கிழமை சப்பறத் திருவிழாவும், 28ஆம் திகதி வியாழக்கிழமை தேர்த்திருவிழாவும், 29ஆம் திகதி வெள்ளிக்கிழமை சமுத்திரத் தீர்த்த திருவிழாவும், 30ஆம் திகதி சனிக்கிழமை கேணித்தீர்த்தமும் இடம்பெற்று அன்று மாலை கொடியிறக்கத்துடன் திருவிழா நிறைவடையவுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.