;
Athirady Tamil News

மத்தியப் பிரதேசத்தில் நடைபெற இருந்த “இந்தியா” கூட்டணியின் பொதுக்கூட்டம் ரத்து!!

0

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் நடைபெற இருந்த இந்தியா கூட்டணியின் பொதுக்கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மத்தியபிரதேச மாநிலத்தின் தலைநகர் போபாலில் வரும் அக்டோபர் மாதம் 2ம் தேதி அன்று இந்தியா கூட்டணியின் பொதுக் கூட்டம் நடைபெறும் என்று கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், அக்டோபர் மாதம் 2ம் தேதி நடைபெற இருந்த பொதுக் கூட்டம் ரத்து செய்யப்படுவதாக முன்னாள் முதல்வர் கமல்நாத் அறிவித்துள்ளார். பொதுக்கூட்டம் ரத்து செய்யப்பட்டதற்கான காரணம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

You might also like

Leave A Reply

Your email address will not be published.