;
Athirady Tamil News

இந்திய எல்லையில் அணு ஆயுதங்களை குவிக்கும் பாகிஸ்தான் – எவ்வளவு தூரம் தாக்கும் தெரியுமா? !!

0

அமெரிக்காவின் மூத்த அணு விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, பாகிஸ்தானிடம் தற்போது மொத்தம் 170 அணு ஆயுதங்கள் உள்ளன. அவை அந்நாட்டின் முக்கிய இராணுவ தளங்களில் வைக்கப்பட்டுள்ளன.

இந்த வேகத்தில் பாகிஸ்தான் தனது அணு ஆயுத கையிருப்பைத் தொடர்ந்து அதிகரித்தால், 2025-ம் ஆண்டுக்குள் அந்நாட்டிடம் இருக்கும் அணு ஆயுதங்களின் எண்ணிக்கை 200 ஆக அதிகரிக்கும்.

செப்டம்பர் 11 ஆம் தேதியன்று வெளியிடப்பட்ட அணு விஞ்ஞானிகளின் ஆய்வறிக்கை ஒன்றில், அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் குறுகிய மற்றும் நீண்ட தூர ஏவுகணைகள் பாகிஸ்தான் நாட்டின் எந்தெந்த பகுதிகளில் வைக்கப்பட்டுள்ளன என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் கொண்ட ஏவுகணைகள் மற்றும் அவற்றின் ஏவும் திறன்கொண்ட லாஞ்சர்கள் ஆகியவை இஸ்லாமாபாத்தின் மேற்கு பகுதியில் கலா சிட்டா தஹார் மலைத்தொடரில் அமைந்துள்ள தேசிய பாதுகாப்பு வளாகத்தில் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

இந்த வளாகம் இரண்டு பகுதிகளைக் கொண்டிருப்பதாக செயற்கைக்கோள் படங்கள் காட்டுகின்றன. ஏவுகணைகள் மற்றும் ராக்கெட் என்ஜின்கள் வளாகத்தின் மேற்குப் பகுதியில் தயாரிக்கப்பட்டு சோதிக்கப்படுகின்றன.

ஃபட்டா ஜாங்கின் வடகிழக்கு பகுதியில், அந்த ஆயுதங்களை ​​சாலை வழியாக எடுத்துச் செல்வதற்கான வழிவகைகள் உருவாக்கப்பட்டிருப்பதற்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

ஜுன் 2023-ல் எடுக்கப்பட்ட படம் ஒன்று ஒரு வாகனத்தின் அடிச்சட்டத்தைக்(Chassis) காட்டுகிறது. இந்த வாகனம், நாசர், ஷாஹீன்-1ஏ பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் பாபர் க்ரூஸ் ஏவுகணை ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்ட சாலையில் அவற்றைக் கொண்டு செல்லப் பயன்படுத்தப்படும். அந்த, ஏவுகணையை நிமிர்த்தி வைத்து, ஏவக்கூடிய திறனும் இந்த வாகனத்துக்கு உள்ளது.

அணு விஞ்ஞானிகள் அளித்துள்ள ஆய்வறிக்கையின்படி, பாகிஸ்தானிடம் தற்போது அணு ஆயுதம் தாங்கும் திறன் கொண்ட ஆறு ஏவுகணைகள் உடனடியாகப் பயன்படுத்தக் கூடியவையாக உள்ளன.

இதில் குறுகிய தூரம் சென்று தாக்கும் அப்தாலி (ஹாட்ஃப்-2), கஸ்னவி (ஹாட்ஃப்-3), ஷாஹீன்-I/A (ஹாட்ஃப்-4) மற்றும் நாசர் (ஹாட்ஃப்-9) மற்றும் நடுத்தர தூரம் சென்று தாக்கும் கௌரி (ஹாட்ஃப்-5) மற்றும் ஷாஹீன் (ஹாட்ஃப்-6) ஆகிய ஏவுகணைகள் அடங்கும்.

இரண்டு அணு ஆயுத திறன் கொண்ட பாலிஸ்டிக் ஏவுகணை அமைப்புகள் தற்போது உருவாக்கப்பட்டு வருகின்றன – நடுத்தர தூரம் சென்று தாக்கக் கூடிய ஷஹீன்-3 மற்றும் மிர்வெட் ஆபில் ஆகியவையே அவை.

2021-ம் ஆண்டு பாகிஸ்தான் தின அணிவகுப்பில் அப்தாலி, கௌரி, ஷஹீன்-2 மற்றும் அபாபில் தவிர அனைத்து அணுசக்தி திறன் கொண்ட ஏவுகணைகளும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

நாசர், கௌரி, ஷாஹீன்-1A ஆகியவற்றுடன் பாபர்-1A மற்றும் ராட்-2 ஆகியவை 2022 ஆம் ஆண்டின் பாகிஸ்தான் தின அணிவகுப்பில் காட்சிப்படுத்தப்பட்டன. கடந்த இருபது ஆண்டுகளில், சாலையில் பயணிக்கக் கூடிய பாலிஸ்டிக் ஏவுகணைகளுக்கான லாஞ்சர்கள் தயாரிப்பில் பெரிய அளவில் வளர்ச்சியும், விரிவாக்கமும் ஏற்பட்டுள்ளது.

அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் கொண்ட ஏவுகணைகளுக்கு பாகிஸ்தானிடம் எத்தனை தளங்கள் உள்ளன என்பதை உறுதியாக கூற முடியாது என அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் ஏவுகணைகள் எத்தனை இடங்களில் உள்ளன?

இந்திய எல்லைக்கு அருகே நிறுவப்பட்டுள்ள 4 அல்லது 5 குறுகிய தூர ஏவுகணைகள் (பாபர், கஸ்னவி, ஷாஹீன்-1, நஸ்ர்) உட்பட பாகிஸ்தான் முழுவதும் 8-9 ஏவுகணை தளங்கள் உருவாக்கப்பட்டுள்ளன என்றும் அணு விஞ்ஞானிகளின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் உள்பகுதியில் உள்ள ராணுவ தளங்களில் நடுத்தர தொலைவு சென்று தாக்கக்கூடிய ஏவுகணைகள் (ஷாஹீன்-2 மற்றும் கௌரி) வைக்கப்பட்டுள்ளன. இது போல் 3 அல்லது 4 ராணுவ தளங்கள் உள்ளன.

அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் கொண்ட ஏவுகணைகளுக்கு பாகிஸ்தானிடம் எத்தனை தளங்கள் உள்ளன என்பதை உறுதியாக கூற முடியாது என அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் கொண்ட குறைந்தபட்சம் ஐந்து ஏவுகணை தளங்கள் பாகிஸ்தானில் வர்த்தக ரீதியிலான செயற்கைக்கோள்களின் படங்கள் காட்டுகின்றன.

ஆனால், 2016ஆம் ஆண்டுக்குப் பிறகு அந்த ஆயுதங்களின் எண்ணிக்கையில் பெரிய அளவில் மாற்றம் இல்லை என்று ஆய்வறிக்கை கூறுகிறது.

இந்த ஐந்து ஏவுகணை தளங்களின் பட்டியலைப் பார்ப்போம்.

அக்ரோ ராணுவ தளம் சிந்து மாகாணத்தில், ஹைதராபாத்தில் இருந்து வடக்கே 18 கிலோமீட்டர் தொலைவிலும், இந்திய எல்லையில் இருந்து 145 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள ஹைதராபாத்தில் இருந்து வடக்கே 18 கிலோமீட்டர் தொலைவிலும், இந்திய எல்லையில் இருந்து 145 கிலோமீட்டர் தொலைவிலும் அக்ரோ ராணுவ தளம் அமைந்துள்ளது. இங்கு ஆறு ஏவுகணை கேரேஜ்கள் உள்ளன. அவை 12 ஏவுகணைகளுக்காக கட்டப்பட்டுள்ளன.

இந்த ராணுவ தளத்தின் விரிவாக்கம் 2004 முதல் நடந்து வருகிறது. செயற்கைக்கோள் படங்களில் காணப்படும் வாகனங்களை பகுப்பாய்வு செய்யும் போது, சாலை வழியாக ஏவுகணைகளைக் கொண்டு செல்லும் திறனுடைய ஐந்து-அச்சு லாஞ்சர்கள், பாபர் க்ரூஸ் ஏவுகணை ஆயுத அமைப்புக்கானவை என்பதைக் காட்டுகிறது.

பாபரின் க்ரூஸ் ஏவுகணையின் வீச்சு திறன் 450 முதல் 700 கிலோ மீட்டர்கள் ஆகும். கடலுக்கு அடியில் இருந்து ஏவுவதற்கான ஏவுகணையையும் பாகிஸ்தான் தயாரித்து வருகிறது.

குஜர்வாலா ராணுவ தளம் பாகிஸ்தானின் மிகப்பெரிய ராணுவ வளாகமாக உள்ளது. இது பஞ்சாப் மாகாணத்தின் வடகிழக்கு பகுதியில் 30 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் பரவியுள்ளது.

இந்திய எல்லையில் இருந்து அதன் தூரம் 60 கிலோ மீட்டர் ஆகும்.

செயற்கைக்கோள் படங்களில் காணப்படும் ஏவுகணை லாஞ்சர்கள், அவை குறுகிய தூரம் சென்று தாக்கக்கூடிய நாசர் ஏவுகணைகளுக்கானவை என்பதைக் காட்டுகின்றன.

நாசர் ஏவுகணை 60 கிலோ மீட்டர் தொலைவுக்குச் சென்று தாக்கக்கூடியதாக உள்ளது.

நாசர் ஏவுகணை 60 கிலோ மீட்டர் தொலைவுக்குச் சென்று தாக்கக்கூடியதாக உள்ளது.

இந்த ஏவுகணை தளம் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள சக்கருக்கு மேற்கே 220 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இந்திய எல்லையில் இருந்து வெகு தொலைவில் அமைந்துள்ள ஏவுகணை தளங்களில் இதுவும் ஒன்றாக உள்ளது.

அக்ரோவைப் போலவே இங்கும் அணு ஆயுதங்களை சேமித்து வைக்க நிலத்தடி கிடங்குகள் கட்டப்பட்டுள்ளன.

செயற்கைக்கோள் படங்களில் காணப்படும் ஏவுகணைகள் இவை அணு ஆயுத திறன் கொண்ட கௌரி அல்லது ஷாஹீன்-2 ஏவுகணைக்கானவை என்பதைக் காட்டுகின்றன.

செயற்கைக்கோள் படங்களில் காணப்படும் ஏவுகணைகள் இவை அணு ஆயுத திறன் கொண்ட கௌரி அல்லது ஷாஹீன்-2 ஏவுகணைக்கானவை என்பதைக் காட்டுகின்றன.

சிந்து மாகாணத்தில் இந்திய எல்லையில் இருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த ராணுவ தளத்தில் லாஞ்சர்களின் கேரேஜ்கள் மற்றும் வால்கள் தெரிகின்றன.

இவை பாபர் மற்றும் ஷாஹீன்-1 ஏவுகணைகளுக்கானவை என்பதை இந்தப் படங்கள் காட்டுகின்றன.

1983 மற்றும் 1990 க்கு இடையில், பாகிஸ்தான் தனது அணுசக்தி திட்டத்திற்காக கிரானா மலையில் அமைந்துள்ள இந்த பெரிய வளாகத்தை பயன்படுத்தியது.

இந்த ஏவுகணை தளம், சாலைவழியாக ஏவுகணைகளை எடுத்துச் சென்று, அவற்றை நிமிர்த்தி தாக்கும் வல்லமை பெற்ற 10 கேரேஜ்கள் மற்றும் வேறு வகையான இரண்டு கேரேஜ்கள் பராமரிப்புக்காக பயன்படுத்தப்படுகிறது.
தரை மற்றும் கடலில் இருந்து ஏவும்வகையிலான ஏவுகணைகள்

பாபர் (Hatf-7) என்பது அமெரிக்காவின் டோமாஹாக் ஏவுகணையைப் போன்றது. அதன் வேகம் ஒலியை விட குறைவாக இருக்கும். இது கடலில் இருந்து ஏவப்படும் குரூஸ் ஏவுகணையாகும்.

தரையில் இருந்து ஏவக்கூடிய பாபர்-1 ஏவுகணையின் வீச்சு 600 முதல் 700 கிலோ மீட்டர்கள் ஆகும். இருப்பினும், அமெரிக்க புலனாய்வு அமைப்புகள் அதன் வரம்பை 350 கிலோமீட்டர்களாக மதிப்பிட்டுள்ளன.

பாபர்-2- 700 கிலோ மீட்டர் சென்று தாக்கவல்லது என்று பாகிஸ்தான் கூறுகிறது. பாபர்-3 க்கும் அதே வீச்சு உள்ளது. ஆனால் இது கடலில் இருந்து ஏவப்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

பாபர்-3 பாகிஸ்தானின் கான், பாண்டா மற்றும் நரங் ஆகிய மூன்று நீர்மூழ்கிக் கப்பல்களுடன் பொருத்தப்பட்டிருக்கும். புதிய நீர்மூழ்கிக் கப்பல்களை அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டாலும், அவற்றில் அணு ஆயுதம் ஏந்திய பாபர்-3 ஏவுகணைகளை நிலைநிறுத்த முடியும்.

இதனுடன், பாபர் க்ரூஸ் ஏவுகணையின் மற்றொரு வடிவடிமான ஹர்பாவை பாகிஸ்தான் உருவாக்கி வருகிறது. இது 2022 இல் போர்க் கப்பல்களிலும் பயன்படுத்தப்பட்டது.

பாகிஸ்தான் செய்தித் தொடர்பாளர், ஹர்பாவை அனைத்து வானிலையையும் சமாளிக்கும் திறன் கொண்ட சப்சோனிக்(ஒலியைவிடக் குறைவான வேகத்தில் செல்லக்கூடிய) ஏவுகணை என்று வர்ணித்துள்ளார். இது 290 கிலோ மீட்டர் தொலைவுக்குச் சென்று தாக்கும் திறன்பெற்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.