;
Athirady Tamil News

மட்டக்களப்பில் லியோ படம் பார்க்கச் சென்ற இளைஞர்கள் மீது வாள் வெட்டு

0

மட்டக்களப்பில் நடிகர் விஜய் நடித்து வெளியான லியோ படத்தை பார்க்கச் சென்ற இரு இளைஞர் குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட முரண்பாடு கைலகலப்பாக மாறி வாள் வெட்டில் முடிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு – செங்கலடி திரையரங்கில் கடந்த வெள்ளிக்கிழமை (20) அவ் வாள் வெட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது.

காயமடைந்தவர்கள்
இச் சம்பவத்தில் 5 பேர் காயமடைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

இதில் 4 பேர் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன் ஒருவர் மட்டக்களப்பு போதானா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

மேலும் சம்பவம் தொடர்பான விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.