;
Athirady Tamil News

நெடுந்தீவில் வீடு ஒன்றில் இருந்து இளைஞர் ஒருவரின் சடலம் மீட்பு

0

நெடுந்தீவு மேற்குப் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து இளைஞர் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நெடுந்தீவு மேற்குப் பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய குணாராசா தனுஷன் என்பவர் இனங்காணப்பட்டுள்ளார்.

அவரது உறவினர் வீட்டுக்கு அண்மையில் உள்ள ஆட்களற்ற வீட்டினை குறித்த இளைஞரே பராமரித்து வருவதாகவும், பகல்வேளைகளில் அவ்வீட்டில் படுத்து
உறங்குவதாகவும் தெரிவிக்கப்படும் நிலையில் நேற்று (ஒக்ரோபர் 30) அவரை காணவில்லை என வீட்டார் தேடிச்சென்றவேளை பூட்டிய வீட்டினுள் படுக்கையிலேயே இறந்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த விடயம் தொடர்பில் நெடுந்தீவு பிரதேச பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு பொலிஸார் சென்று விசாரணைகளை மேற்கொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.