;
Athirady Tamil News

மாவட்ட ரீதியில் லிட்ரோ எரிவாயுவின் புதிய விலைப்பட்டியல் வெளியீடு

0

கடந்த சனிக்கிழமை (04) தொடக்கம் லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையில் உத்தியோகபூர்வமாக அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

அதன்படி ஒவ்வொரு மாவட்டங்களிலும் விற்பனையாகவேண்டிய லிட்ரோ எரிவாயுவின் புதிய விலைப்பட்டியல் இப்போது லிட்ரோ நிறுவனத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.

புதிய விலை
12.5 கிலோ கிராம் எடையுடைய எரிவாயு சிலிண்டரின் விலை 1,617 ரூபாய் முதல் 1,431 ரூபாவுக்கிடையில் விற்கப்படவுள்ளது.

அதேபோல், 5 கிலோ கிராம் எடையுடைய லிட்ரோ எரிவாயு சிலிண்டர் 38 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதோடு, அதன் புதிய விலை 1,431 ஆகவுள்ளது.

உலக சந்தையில்
மேலும், 2.3 கிலோ கிராம் எடையுடைய லிட்ரோ எரிவாயு சிலிண்டர் 18 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதோடு, அதன் புதிய விலை 688 ஆகவுள்ளது.

உலக சந்தையில் ஏற்பட்டுள்ள விலை அதிகரிப்பே இலங்கையிலும் எரிவாயுவின் விலையில் அதிகரிப்பு ஏற்பட காரணமாகியுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.